Saturday 18 05 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

திருநள்ளாரில் சாலையில் மாடு குறு கிட்டதால் பைக்கில் சென்றவர் பலி
திருநள்ளாரில் சாலையில் மாடு குறு கிட்டதால் பைக்கில் சென்றவர் பலி
ஆதர்ஷ்.டி.எம். Sep 30 2023 கிரைம் ஏரியா

திருநள்ளாரில் சாலையில் மாடு குறு கிட்டதால் பைக்கில் சென்றவர் பலி

திருநள்ளாரில் சாலையில் மாடு குறு கிட்டதால் பைக்கில் சென்றவர் பலி  

திருநள்ளாரில் சாலையில் மாடு குறு கிட்டதால் மனைவி, மகனை அழைக்க பைக்கில் சென்ற தொழிலாளி பைக்கிலிருந்து விழுந்து பலியானார்.

திருநள்ளாறை அடுத்த அகலங்கன்னு கீழத்தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ஜீவானந்தம்(31)மனைவி ரேணுகா (29) மற்றும் மகன் விக்னேஷ் (8) ஆகியோருடன் அகலங்கண்ணு சாலையில் வசித்து வந்தார். கடந்த 21-ம் தேதி  திருநள்ளாறு சந்தை வெளித் தோப்பில் மாமியார் வீட்டில் தங்கியிருந்த மனைவி, மகனை அழைத்துச் செல்ல நண்பரின் பைக்கை எடுத்துக் கொண்டு வந்துள்ளார்.

 செல்லூர் பகுதியிலிருந்து திருநள்ளாறு நோக்கி ஜீவானந்தம் வந்து கொண்டிருந்தபோது கான்பெட் பெட்ரோல் பங்க் அருகில் சாலையின் குறுக்கே ஓடிய மாடு மீது மோதி நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். பின்னந்தலை, நெற்றி, தோள்பட்டை, கைமுட்டியில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடினார்.

அகலங்கன்னு மேலத்தெருவைச் சேர்ந்த அவரது நண்பர் தாமோதரன்(31) சிலரது உதவியுடன் ஜீவானந்தத்தை காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஜீவானந்தம் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

விபத்து குறித்து ஜீவானந்தத்தின் உறவினர் பக்கிரிசாமி(55) காரைக்கால் வடக்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஜீவனந்தத்தின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.   


Related News