புதுச்சேரி சுகாதாரத்துறை மற்றும் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் இயங்கும் புகையிலை கட்டுப்பாட்டு திட்டம் (அரசு மார்பு நோய் நிலையம்). மற்றும் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இணைந்து நடத்தும் புகையிலை கட்டுப்பாடு குறித்து மாவட்ட அளவிலான திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் மதக்கடியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
புதுச்சேரியில் 2015-ஆம் ஆண்டு புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்தவும்,சட்டத்தை அமல்படுத்தவும்,தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டது.இத்திட்டத்தின் முக்கிய நிகழ்வான மாவட்ட அளவிலான திறன் வளர்ப்பு பயிற்சி அனைத்து துறைகளில் ஒத்துழைப்பை நல்கவும்,புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தை அமல்படுத்தவும் நடைபெற்றது.
முகாமில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் கலந்து கொண்டு,தலைமை தாங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.பின்னர் ஆட்சியர் குலோத்துங்கன் புகையிலையினால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்தார்.அனைத்து துறை அதிகாரிகள் முகாமில் கலந்து கொள்ளுமாறும், செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் இந்த முகாமில் தெரிந்து கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
முகாமில் மாநில புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரி/ மாநில காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர்.வெங்கடேஷ் வரவேற்புரை ஆற்றினார்.காரைக்கால் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் துணை இயக்குனர் டாக்டர்.சிவராஜ்குமார் வாழ்த்துரை வழங்கினார்.கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து துறையை சேர்ந்தவர்களுக்கு புகையிலையினால் ஏற்படும் பாதிப்பு,புகையிலை தடுப்பு சட்டம், காரைக்காலில் புகையிலை கட்டுப்பாட்டுக்கான வழி முறைகள்,இடர்பாடுகள், புகையிலை இல்லா அரசு அலுவலகங்கள்,பள்ளி கல்லூரிகள் உருவாக்குதல் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் புதுச்சேரி அரசின் மாநில புகையிலை கட்டுப்பாட்டு மையம், இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி, புதுச்சேரி மற்றும் ஜிப்மர், காரைக்கால் இணைந்து இதே போல் பல உயர் நிலை கூட்டங்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் துணை ஆட்சியர்கள் செந்தில்நாதன்,வெங்கடகிருஷ்ணன்,