பி சி எஸ் பதவி உயர்வு காலதாமதம்!.
புதுச்சேரியில் 94 பி சி எஸ் அதிகாரிகள் பதவி உள்ளது அதில் 50 சதவீத பதவி மத்திய அரசு நேரடியாக நியமனம் செய்யும் மீதமுள்ள 50 சதவீத பதவியை மாநில அரசு பதவி உயர்வு மூலம் நிரப்பிக் கொள்ளும் ஆனால் தற்பொழுது 30 பதவிகள் மேல் பி சி எஸ் பதவி காலியாக உள்ளது அதனால் முக்கியத்துறைகளான கல்வித்துறை வேளாண்துறை மகளிர் மேம்பாட்டு துறை விளையாட்டு துறை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை என முக்கிய துறைகள் அனைத்தும் இயக்குனர் இல்லாமல் உள்ளது சரியான தலைமை இல்லாததால் பட்சத்தின் போது ஒதுக்கப்பட்ட நிதிகள் அனைத்தும் முழுமையாக செலவு செய்ய முடியாமல் நெருக்கடியில் இந்த துறைகள் உள்ளன கூடுதலாக இந்த துறைகளை கவனிக்கும் அதிகாரிகளும் பணிசமையின் காரணமாக சரியாக கவனிக்கவில்லை என குற்றச்சாட்டு பரவலாக இருந்துள்ளது இந்த சூழலில் பி சி எஸ் அதிகாரிகள் பதவி உயர்வு மற்றும் இடம் மாற்றும் சம்பந்தமான கோப்பு மூத்த மாண்புமிகு வெள்ளை மாளிகைக்கு அனுப்பினாராம்.. அதில் சர்ச்சை அதிகாரிகளான சுதாகர் மேத்யூஸ் சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகளை முக்கிய துறைகளில் ஒதுக்கி கோப்பு அனுப்பினாராம் இதை பார்த்து ஆளுநர் நேர்மையாக பணி செய்யக்கூடிய ஆதாஷ் ,மாணிக்க தீபன், உள்ளிட்ட அதிகாரிகளை தான் நியமிக்க வேண்டும் என குறிப்பிட்டு கோப்பை திருப்பி விட்டாராம் ஆதனால் பி சி எஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு தற்போது வரை தள்ளி செல்கிறது என்கின்றனர் விபரம் அறிந்த வட்டாரங்கள்